மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

0
72

 மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கொரோனா  உருவானது. அதனையடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல் படுத்தி உள்ளனர். தற்போது இந்தியாவில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 20க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த ஒமைக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று  மூன்றாவது அலையாக வந்தாலும் சொல்லும்படியான பாதிப்புகள் இருக்காது என்று கூறி உள்ளனர். தற்பொழுது கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருக்கிறது. அதனால் பல மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். மக்கள் கூட்டம் கூடுவது நாள் பெருவாரியாக தொற்று பரவல் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த லக்னோவில் தற்போது 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.

இந்த தடை உத்தரவானது  ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்றும் விதிகள் போடப்பட்டுள்ளது.தற்பொழுது லக்னோவில் தேர்வுகள் வரவுள்ளது. அந்த  தேர்வுகளில் சமூகவிரோதிகள் போன்றோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது. அதனையெல்லாம் தடுக்க யுபிசிஎஸ், பிஎஸ்சி அல்லது அரசு தொடர்பான தேர்வு மையங்களில் போலீஸ் படை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.