திருச்சி சிறுமி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்கள்??

0
60

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அவதத்தூர் பகுதியில் பெரிய சாமி என்ற விவசாயி வாழ்ந்து வருகிறார்.இவருக்கு கங்கா தேவி என்ற மகள் உள்ளார். கங்காதேவி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கங்காதேவி வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று மாலை 12 மணி அளவில் அவளது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு வீட்டில் உள்ள குப்பைகளை அங்குள்ள முள் காட்டுப்பகுதியில் கொட்டுவதற்காக சென்றுள்ளார்.மாலை வரை கங்காதேவி வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம்பக்கம் தேடியுள்ளனர் இந்நிலையில் கங்காதேவி குப்பைகளை கொட்ட சென்ற இடத்தில் எரிந்து சடலமாக கிடந்தார்.

இதனை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் வந்துள்ளனர்.மேலும் அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில் காவல் அதிகாரிகள் உறவினர் இரண்டு பேர் உட்பட மொத்தம் 11 பேரை விசாரணை செய்து வருகின்றனர். 11 தனிப்படை கொண்ட குழு இந்த விசாரணையை நடத்தி வந்தது.

அதன் பிறகு சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பிரேத பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கங்கா தேவி அவரது அண்ணன் முறை உறவான செந்தில் என்பவரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார்.இதனை அவரது தந்தை தெரிந்துகொண்டு கண்டித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னரே முழு தகவல்கள் தெரியவரும்.

author avatar
Parthipan K