119 ஆபாச வீடியோக்கள்! ரூ.9 கோடிக்கு விற்பனை! அதிர்ச்சியில் திரையுலகம்!

0
71
119 porn videos! Sale for Rs 9 crore! The screen world in shock!
119 porn videos! Sale for Rs 9 crore! The screen world in shock!

119 ஆபாச வீடியோக்கள்! ரூ.9 கோடிக்கு விற்பனை! அதிர்ச்சியில் திரையுலகம்!

திரையுலகில் பல மோசடிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பல லட்சம் பணம் போன்றவற்றை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.இதுபோல ஓர் பக்கம் நடந்து வந்தாலும் மறுபக்கம் மக்கள் முன்னிலையில் பிரபலமானவர்களே பல சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.அந்தவகையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் ராஜ் குந்த்ரா.இவர் ஒர் தொழிலதிபரும் ஆவார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஓர் இளம்பெண் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி தொழிலதிபர் ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்தார்.அதில் அந்தப் பெண்மணி கூறியதாவது, தொழிலதிபர் ராஜ்குந்த்ரா வெப்சீரிஸ் தொடர் எடுக்கப்போவதாக கூறி, ஏராளமான பெண்களை அழைத்து அவர்களை பாலியல் படங்களில் நடிக்க கட்டாயப்படுத்துகிறார் எனக் கூறினார்.அதனையடுத்து இது சம்பந்தமாக மும்பையில் மேற்கு பகுதியில் உள்ள மாலத், மாத் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பாலியல் படங்கள் எடுக்கப் போவதாக தகவல்கள்  போலீசாருக்கு வந்தது. அதனையடுத்து அப்பகுதியில் சோதனை  மேற்கொண்டதில் அங்கு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா அடிப்படையில்தான் அனைத்தும் செய்யப்பட்டது என்று  கூறியுள்ளனர்.அதனையடுத்து ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு விசாரணையின் பெயரில், ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குந்த்ரா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் ஐபிசி 420, 292 ,293 போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் பெண்களை ஏமாற்றி ஆபாச படங்களை எடுத்து ஒரு செயலி உருவாக்கி அதில் ஏராளமானோருக்கு  விற்று வந்ததாக கூறுகின்றனர்.

ஷில்பா ஷெட்டியின் கணவரை கைது செய்வதற்கு தேவையான ஆவணங்கள் உள்ளது என போலீசார் தெரிவித்தனர். அதனையடுத்து ராஜ்குந்த்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்ட ராஜ்குந்த்ரா- வுக்கு இரு மாதம் கழித்து நேற்று ,ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. நேற்று வெளிவந்த உடன் மேலும் அவரது வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது.அது என்னவென்றால்,ராஜ்குமாரின் செல்போன், லேப்டாப்,ஹார்ட் டிஸ்க் ஆகியவை போலீசார் கைப்பற்றினர்.அந்த ஆவணங்களில் சுமார் 119 ஆபாச படங்கள் உள்ளதாக கூறியுள்ளனர்.இந்த படங்கள் அனைத்தும் ரூ 9 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.இந்த செய்தியை கேட்ட பாலிவுட் திரையுலகம் சற்று அதிர்ச்சியடைந்துள்ளது.