அமைதிக்கான நூறாவது நோபல் பரிசு பெற்ற அகமது!

0
102

எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிரதமர் அபியா அகமது, “அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக” 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திரு அகமது தலைமையின் குழு கடந்த ஆண்டு ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது எரித்திரியாவுடனான இராணுவப் போரை முடிவுக்கு கொண்டுவர உதவியது, கிட்டதட்ட 1998 முதல் 2000 வரை எல்லை தகராறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

ஒஸ்லோவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் 9 மில்லியன் க்ரோனர் (சுமார் 54 மில்லியன் ருபாய்) மதிப்புள்ள பரிசைப் பெறுவார். இந்த டிசம்பரில் நோர்வே அமைதிக்கான நோபல் பரிசு என்பது கடந்த 12 மாதங்களில் “மனிதகுலத்திற்கு அமைதியுடன் பெரும் நன்மையை உருவாக்கியவருக்கு” வழங்கப்பட இருக்கிற விருது, இந்த ஆண்டு 301 பரிந்துரைகளுடன் 223 நபர்களாகவும் 78 அமைப்புகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் திரு கிரேட்டா டன்பர், 16 வயதான ஸ்வீடிஷ் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் வழக்கறிஞர்.

யார் இந்த அகமது?

ஏப்ரல் 2018 இல் எத்தியோப்பிய பிரதமர் பதவியில் இருந்து விலகியதில் இருந்து, அகமது எத்தியோப்பியாவில் ஒரு பெரிய சுயாதீன சீர்திருத்தத்தை மேற்கொண்டார். இது கடுமையான கட்டுப்படுத்தப்பட்ட நாட்டில் பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது.

ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆர்வலர்களை விடுவிக்க உத்தரவிட்டார். ஆனால் அவரது மிக முக்கியமான பணி, போட்டி அண்டை நாடான எரித்திரியாவுடனான சமாதான உடன்படிக்கையின் ஆதரவாளராக இருந்தது, இது 20 ஆண்டுகால சர்வதேச மோதலை முடிவுக்கு கொண்டுவர உதவியது.

அகமதுவின் சீர்திருத்தம் எத்தியோப்பியாவில் உள்ள இனக்குழுக்களுக்கிடையேயான பதற்றத்தை தணித்து தங்கள் மக்கள் தாயகத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு காரணமான பிரச்சினை ஆணிவேரை பிடுங்கி எறிந்து சுமூகமான உறவை மேம்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையை செயல்படுத்தி கொண்டே இருந்தார்.

இதனால் சுமார் 2.5 மில்லியன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினார்கள் என்றால் அது மிகையாகாது. அகமது போல தலைவர்கள் நம் நாட்டிலும் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

author avatar
Parthipan K