மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

0
223
1000 rupees every month project implementation! Announcement made by the Chief Minister!
1000 rupees every month project implementation! Announcement made by the Chief Minister!

மாதம் தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது.அப்போது திமுக அரசானது பெண்க்ளுக்கு கட்டணமில்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நாண்முதல்வன் திட்டம் மற்றும் மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ 1000 திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கப்படும் என அறிவித்தது.

அதனை தொடரந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.மேலும் உடனடியாக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.அதனை தொடரந்து நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டுவரபட்டது.

ஆனால் மாதந்தோறும் ரூ 1000 வழங்கும் திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.ஆனால் இந்தியாவில் நடப்பாண்டில் மேகாலயா, நாகலாந்து,திரிபுரா,ராஜஸ்தான்,மத்திய பிரதேசம்,சத்தீஸ்கர்,கர்நாடகா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்கள் செய்து வருகின்றது.அதன் காரணமாக மக்களுக்கு புது புது வாக்குறுதிகளையும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய பிரதேச அரசானது பெண்களுக்கான புதிய நலத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தின் மூலமாக ஏழை பெண்கள் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.லட்லி பஹினா திட்டத்தை மத்திய பிரேதச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுசன் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ 60,000 கோடி செலவிடப்படுகிறது

author avatar
Parthipan K