சுய இன்பத்திற்கு பலியான 100 பெண்கள்! இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. பகீர் வாக்கு மூலம்!

0
132
100 women who are victims of self-indulgence! I can't live without this.. By Bhagir Vot!
100 women who are victims of self-indulgence! I can't live without this.. By Bhagir Vot!

சுய இன்பத்திற்கு பலியான 100 பெண்கள்! இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது.. பகீர் வாக்கு மூலம்!

தினந்தோறும் பெண்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்து தான் வருகின்றனர். அந்த வகையில் சென்னை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபர் தனியார் ஓட்டலில் வேலை செய்து வரும் நிலையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்.

தினமும் இவர் படிப்பு முடிந்ததும் ரோட்டில் வரும் 20 முதல் 25 வயது உடைய பெண்களிடம் சில்மிஷம் செய்வதையே வேலையாக வைத்திருந்து உள்ளார். அவ்வாறு இவர் தினம் தோறும் ஒன்று முதல் பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டு இருந்துள்ளார்.

அதேபோல ஓர் இளம் பெண்ணிடம் அவதூறாக நடந்து கொண்டுள்ளார். ஆனால் அப்பெண் ராணுவ வீரரின் மகள் என்று இவருக்கு தெரியாது, நன்றாக மாட்டிக்கொண்ட அந்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்பு அவரிடம் விசாரணை செய்கையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. இவருக்கு பெண்களிடம் சில்மிஷம் செய்யாமல் ஒருநாளும் இருக்க முடியாதாம், ஏனென்றால் இது அவருடைய பழக்கமாகவே வைத்துள்ளாராம்.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் நடு ரோட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பின்பக்கம் தட்டி விட்டோ அல்லது சில்மிஷம் செய்து விட்டோ மோட்டார் வண்டியில் உடனடியாக சென்று விடுவாராம். இந்த தகவலை கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்கொண்டு இவருக்கு கவுன்சிலிங் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு இருக்கும் நிலையில் இதே போல குஜராத் மாநிலத்திலும் பிரபலமான மல்யுத்த வீரரும் நடந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குஜராத்தில் உள்ள ஓர் காவல் நிலையத்தில் முகமூடி அணிந்த ஒரு நபர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் என்று புகார் அளித்தார்.

அதுமட்டுமின்றி அவர் அடிக்கடி என்னை சீண்டுவதாகும் அவர் கூறிய நிலையில், போலீசார் இந்த புகாரை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சிசிடிவி கேமராக்கள் வைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.அவ்வாறு அமைக்கப்பட்ட  ஒரு கேமராவில் பெண்மணி கூறியது போல, ஒருவர் முகமூடி அணிந்து சென்றுள்ளது சிக்கியது.

பின்பு அவரை பிடித்து விசாரிக்கையில் தான் தெரியவந்தது, இவர் புகழ் பெற்ற மல்யுத்த விளையாட்டு வீரர் என்றும், இவராலும் பெண்களை தீண்டாமல் இருக்கவே முடியாது என்று அதிர்ச்சிகரமான தகவலை தான் தெரிவித்தார்.

எந்த பெண்மணியும் தனக்கு ஏற்பட்ட அவதூறு குறித்து வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில், இந்த ஒரு பெண்மணி மட்டும் புகார் அளித்துள்ளார்.இவ்வாறு ஆண்களின் ஹாபியாக பெண்களை சீண்டுவது என்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.