100 ரூபாய் கட்டணம்! படுக்கையறை காட்சிகள் லைவ் வீடியோ! மனைவியும் கூட்டு! பிறகு?

0
81

மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது படுக்கை அறை காட்சிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்து கட்டணம் வசூலித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இந்த இளைஞருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனராம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் கம்ப்யூட்டர்களில் புகுந்து விளையாடும் அளவிற்கு திறமை வாய்ந்தவராம். இன்டர்நெட்டில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி விவரங்கள் அவருக்கு தெரியுமாம். இப்படித்தான் தனது படுக்கையறை காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து பணம் வசூலிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

இப்படி இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் அவர்களுடைய அறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை பார்ப்பதற்காக ஆளுக்கு 100 ரூபாய் என்ற வீதத்தில் கட்டணமும் வசூலித்து காண்பித்துள்ளார்.

இந்த விஷயம் எப்படியோ இரண்டாவது மனைவிக்கு தெரியவர அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரண்டாவது மனைவி கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

இவரது முதல் மனைவிக்கு இந்த விஷயமும் ஏற்கனவே தெரியுமாம். அவரை சமாதானப்படுத்தி இதற்கு உடந்தையாக வைத்துள்ளார். மேலும் இந்த வீடியோவை நேரலையில் பார்ப்பதற்காக 100 முதல் 1000 வரை கட்டணம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

பேஸ் லெஸ் மற்றும் ஃபேஸ் ஸ்ட்ரீமிங் என்று இரண்டு ஆப் மூலம் கட்டணம் வசூலித்துள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் தனது இரண்டு மனைவிகள் உடனிருந்த படுக்கையறை காட்சிகளை நேரடியாக லைவ் செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது இந்திய சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் அவருடைய தொலைபேசி மற்றும் வங்கியில் உள்ள 12 லட்சம் மதிப்பிலான நகைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

author avatar
Kowsalya