தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய 10 டன் போதை பொருள்! மத்திய புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை!

0
86

நாட்டில் உள்ள துறைமுகங்கள் மூலமாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு போதை பொருள் கடத்த முயற்சி செய்வதும், அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதும் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல தற்சமயம் இந்திய துறைமுகத்தின் தன் கணக்கில் போதை பொருள் சிக்கி உள்ளது தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக மலேசியாவில் இருந்து 10 டன் போதை பொருட்கள் கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது இதன் மதிப்பு 1.75 கோடி என சொல்லப்படுகிறது.

இதை மத்திய வருவாய் புலனாய்வு குறைவு அதிகாரிகள் கண்டுபிடித்து போதை பொருட்களை கைப்பற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாக, அதனை இறக்குமதி செய்த ஷிப்பிங் கம்பெனி மீதும், அவை யார் மூலமாக இங்கே வந்தது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.