தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

0
60
10 month old baby with mother bone! Mind melting elastic event!
10 month old baby with mother bone! Mind melting elastic event!

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

தற்போதைய காலத்தில் மக்கள் பலருக்கு சரியான வேலைவாய்புகள் கிடைக்காமல் வெளிநாடுகளை நாடி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பலர் தனது குடும்பங்களில் உள்ள கஷ்டங்களுக்காக அங்கு பணி செய்து வரும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி கஷ்டத்தை நீக்குகின்றனர்.அவ்வாறு சென்ற பெண்மணிக்கு ஏற்பட்ட சம்பவம் மனதை உருக்கும் அளவிற்கு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் வேலவன் இவருக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்த மூன்று குழந்தைகளில் ஓர் குழந்தைக்கு சிறுநீர் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இவர்களால் முடிந்தவரை பணம் செலவு செய்து காப்பாற்ற முயன்றும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.அதனையடுத்து குடும்பம் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.வேலவனுக்கும் சரியான வேலைவாய்ப்பு அமையவில்லை.அதனால் அவரது மனைவி துபாயில் வீட்டு பணி பெண்ணாக வேலை செய்ய சென்றார்.அவ்வாறு சென்று தனது குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார்.அதனையடுத்து கொரோனா முதல் அலை உருவாகிய போது அவர் துபாயிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார்.அப்போது அவருக்கு மீண்டும் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த 7 மாத குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் துபாயிக்கு வேலை செய்ய சென்றார்.அவ்வாறு சென்ற 4 மாதங்களிலேயே அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது.அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை பரிதாபமாக உயிரிழந்தார்.அவர் இறந்த தகவல் அவரது கணவருக்கு தெரிவிக்கப்பட்டது.அவரது மனைவி உடலை இந்தியா கொண்டுவருவதற்கு போதுமானதான பணம் இல்லாத காரணத்தினால் அந்நாட்டிலேயே தகனம் செய்யும் படி ஒப்பந்ததில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் அவரது மனைவி உடல் துபாயில் தகனம் செய்யப்பட்டது.அதனையடுத்து அவரது 11 மாத குழந்தையை சக பணியாளர்கள் பராமரித்து பார்த்துக்கொண்டனர்.அவரது கணவர் வேலவன் அவரது மகனை எவ்வாறு இந்தியா கொண்டு வருவது என சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.இந்த தகவல் முதலமைச்சர்-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரின் உதவியோடு அந்த 11 மாத குழந்தை தனது தாயின் அஸ்தியுடன் இந்தியா வந்தடைந்தது.இச்சம்பவம் அனைவரின் மனதையும் உருக்கும் அளவிற்கு உள்ளது.