வெறிச்சோடிய சிட்னி மைதானம்

0
95

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றுவருகிறது..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ஏறக்குறைய 5000 ஆயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ள இந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தியாவிலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் இதேபோல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

author avatar
Parthipan K