ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்!

0
67
Accident at Army Training School! Tragedy befalls the authorities!
Accident at Army Training School! Tragedy befalls the authorities!

ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கெய்தா, போகோ, ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் பல்வேறு கிளர்ச்சியாளர்களும், பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் கடுனா மாகாணத்தில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நேற்று துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த எதிர்பாராத ராணுவப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் என இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் சில அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் மேலும் ஒரு அதிகாரியை துப்பாக்கி முனையில் கடத்தியும் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது எந்த பயங்கரவாத குழு என்பது குறித்தும் கடத்தப்பட்ட அதிகாரியை மீட்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த அமைப்பும் அதற்கு எந்த பொறுப்பும் ஏற்கவில்லை  என்பதும் குறிப்பிடத் தக்கது.