மருந்து மாத்திரை தேவை இல்லை!! சர்க்கரை நோய் முற்றிலும் நிவர்த்தியாக இதோ இந்த 2 போதும்!!

0
186
#image_title

மருந்து மாத்திரை தேவை இல்லை!! சர்க்கரை நோய் முற்றிலும் நிவர்த்தியாக இதோ இந்த 2 போதும்!!

தற்பொழுது இருக்கும் காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் என்பது அரிது. அதிலும் வகை 1, வகை 2 சர்க்கரை நோய்கள் அனைவருக்கும் இருக்கிறது. வகை 1 சர்க்கரை நோய் குழந்தைகளுக்கு அதிக அளவில் காணப்படுகிறது. வகை 2 சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு காணப்படுகிறது. இந்த பதிவில் சர்க்கரை நோயை இயற்கையான முறையில் எவ்வாறு குணமாக்குவது என்று பார்க்கலாம்.

 

சர்க்கரை நோயை குணமாக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கள்…

 

கோவைக்காய்

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோவைக்காயை அதிக அளவு சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் 5 கோவைக்காய்களை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து குடிக்கலாம். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி, மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் இந்த கோவைக்காய் ஜூசை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.

 

கோவைக்காயின் நன்மைகள்…

 

கோவைக்காய் நம் கல்லீரலில் இருக்கும் நச்சுகளை நீக்கும். கல்லீரலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும். ஜீரணம் சார்ந்த கோளாறுகளை சரிசெய்யும். கணையம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும்.

 

டைப் 1 வகை சர்க்கரை நோய் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்பவர்கள் கோவைக்காயின் இலையை 2 அல்லது 3 எடுத்து இதில் தேவையான அளவு சீரகம் வைத்து மடித்து வெற்றிலை போடுவது போல மடித்து மென்று சாப்பிட்டு வந்தால் ஊசி போடுவதை மெல்ல மெல்ல குறைக்கலாம். மேலும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையும் மெல்ல மெல்ல குறைக்கலாம்.

 

பீர்க்கங்காய்…

 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் பீர்க்கங்காயும் சிறந்த பொருள். இந்த பீர்க்கங்காயை 300 கிராம் அளவு எடுத்து மிக்சியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை வடிகட்டி தினமும் இரவு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.

 

மஞ்சள் பூசணிக்காய் அல்லது பரங்கிக்காய் அல்லது அரசாணிக்காய்

 

இந்த மஞ்சள் பூசணிக்காய்யை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இதை அரசாணிக்காய் அல்லது பரங்கிக்காய் என்றும் கூறுவார்கள்.

 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடை குறைந்து மெலிதாக காணப்படுவார்கள். அவர்கள் தங்களின் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த மஞ்சள் பூசணிக்காயை சாப்பிடலாம்.

 

இந்த காயை 100 கிராம் அளவு எடுத்து தோல் விதையுடன் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி இதை குடித்து வரவேண்டும். இவ்வாறு அரசாணிக்காயை ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.சர்க்கரை அளவு குறையும்.