பாகிஸ்தான் செல்லும் இலங்கையின் அண்ணன் – தம்பி

0
82

இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட கோத்தபாய ராஜபக்ச அவர்கள் முதல் வேலையாக தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமனம் செய்தார். இன்று மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இலங்கை அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சேவுக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தன்னுடைய நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று கோத்தபயா ராஜபக்சே விரைவில் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபயவுக்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து இந்தியாவுக்கு அரசு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று நவம்பர் 29-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இந்தியா வர உள்ளதாகவும், இந்திய பயணத்தை முடித்த பின்னர் அவர் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் பிரதமராக பதவியேற்கவுள்ள மஹிந்தாவும் உடன் செல்வார் என கூறப்படுகிறது.

இலங்கை ஏற்கனவே சீனாவுக்கு நட்பு நாடாக இருந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானையும் நட்பு பட்டியலை வைக்கவிருப்பதாகவும் இலங்கை, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக திரும்புமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

#
author avatar
CineDesk