சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்!

0
136
Warning to the people of Salem! Increasing robbery incident in these areas!
Warning to the people of Salem! Increasing robbery incident in these areas!

சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்!

சமீபகாலமாக கொலை, கொள்ளை ,பலாத்காரம் போன்றவை தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சேலத்தில் தற்பொழுது செயின் பறிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இந்த கொள்ளையர்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி பேட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம். அவரது மனைவி பாக்கியத்திற்கு தற்பொழுது 70 வயது ஆகிறது.

ராமசாமியின்  மனைவியை கொள்ளைக்காரர்கள் பலநாள் கண்காணித்து வந்துள்ளனர். நேற்று பாக்கியம் என்பவர் அவரது தெரு அருகே உள்ள நூல் மில்லுக்கு நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் திடீரென்று பாக்கியத்தின் கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவரால் அவர்களைப் பின் தொடர முடியாமல் கத்தி கூச்சலிட்டுள்ளார். பாக்கியத்தின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த கொள்ளையர்கள் தப்பித்து விட்டனர். பின்பு பாக்கியம் அங்குள்ள அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்பொழுது போலீசார் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சமீப காலமாக அம்மாபேட்டை ,சன்னியாசி குண்டு போன்ற இடங்களில் அதிக அளவு செயின் பறிப்பு சம்பவம் நடைபெறுகிறது. குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்களையே அவர்கள் குறிவைத்து தாக்குகின்றனர். அதனால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.வயது முதிந்தவர்கள் வெளியே செல்லும் போது தனியாக செல்லாமல் இருப்பதன் மூலம் இதுபோல கொள்ளை சம்பவத்தை தவிர்க்க முடியும்.கொள்ளைகாரர்கள் வயது முதிந்தவர்களை குறிவைப்பதன் காரணம் அவர்களால் தங்களை பின் தொடர முடியாது என்பது தான்.அதனால் பெரியவர்கள் முடிந்தவரை வெளியே செல்லும்போது தன்னுடன் வேறு யாரையாவது கூட்டி செல்லலாம்.