இந்த அறிகுறிகள் உங்கள் கையில் தென்படுதா? உங்க சுகர் அளவை செக் பண்ணுங்க!

0
166

நீங்க தலைமுறையினர் இளைஞர்களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி, முறையற்ற உணவு பழக்கங்களால் சுகர் லெவல் அதிகமாகி வருகின்றது. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு கூட அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதேபோல் இந்த சர்க்கரை ஆனது வம்சாவழியாய் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு சர்க்கரை இருந்தால் தொடர்ந்து அந்த குடும்பத்திலோ அல்லது அடுத்து வரும் தலைமுறையினருக்கோ சர்க்கரை நோய் வரும் என்று சொல்லப்படுகிறது.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோய் அறிகுறிகள் என்னவெனில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், எடை இழப்பு, உணர்வின்மை அல்லது கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு மற்றும் சோர்வு போன்றவை அடங்கும். ஆராய்ச்சியாளர்கள் கைகள் மற்றும் விரல்களில் தோன்றும் நீரிழிவு நோயின் சில அறிகுறிகளையும் விவரித்துள்ளனர். இது நீரிழிவு நரம்பியல் என்று அழைக்கப்படுகிறது. இந்த அறிகுறிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

1. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கைகளில் மிகுந்த கூச்ச உணர்வு இருக்குமாம். இது 50 சதவீத நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது.
2. நீரிழிவு நரம்பியல் நோயின் கடுமையான அறிகுறிகள் மோனோநியூரோபதி என்று அழைக்கப்படுகின்றன. மோனோநியூரோபதி கைகளில் கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மையை ஏற்படுத்தும். இது தவிர, கைகளின் விரல்களையும் பாதிக்கலாம்.
3. இந்த நிலையில் கைகளில் உணர்வின்மை மட்டுமின்றி, வேறு பல அறிகுறிகளும் காணப்படுவதாகவும், இது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீக்கிரம் எழுந்து, தவறாமல் உடற்பயிற்சி செய்வது நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும். மேலும், நீங்கள் தொடர்ந்து சர்க்கரை அளவை பரிசோதித்து சுறுசுறுப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் உணவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் நெல்லிக்காய், மற்றும் துளசி ஆகியவற்றை உட்கொள்ளவும். நீரிழிவு நோயிலும் பாகற்காய் நன்மை பயக்கும்.

பாகற்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதன் சாறு உடலில் குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

author avatar
Kowsalya