இத்தாலியில் ஆயிரம் உயிர்களை குடித்துள்ள கரோனா

0
68

இத்தாலியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு 189 பேர் மரணம் அடைந்த நிலையில், வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு வாரத்தில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் ஆயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ள கரோனா உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது..

author avatar
Parthipan K