ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!

0
120

நாளுக்கும் ஒவ்வொரு கசாயம் விதம் வாரத்திற்கு ஏழு கசாயம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் இன்றி நீண்ட நாள் வாழ இந்த கசாயம் உங்களை பலப்படுத்தும்.

திங்கட்கிழமை:

வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்து குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேரவே சேராது.

செவ்வாய்க்கிழமை:

உடல் உஷ்ணம் சீராக கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் போதும்.

புதன்கிழமை:

தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, முழு சளியும் மலத்துடன் வெளியேறிவிடும்.

வியாழக்கிழமை:

சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியை போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும், சர்க்கரை நோய் தீரும்.

வெள்ளிக்கிழமை:
வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியை போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

சனிக்கிழமை:
உடலுக்கு இரும்பு சத்து கிடைக்க முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க கிடைக்கும்

ஞாயிற்றுக்கிழமை:
சுக்கு மல்லி காபி குடித்து வந்தால் இருமல் சரியாகும்.

இப்படி 7 நாளுக்கு ஒரு கசாயம் விதம் பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்

 

author avatar
Kowsalya