சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
Home Blog Page 3

அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மன்சூர் அலிகான்…. என்ன காரணம் தெரியுமா..??

0

அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மன்சூர் அலிகான்…. என்ன காரணம் தெரியுமா..??

நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின் இறுதி நாள் அன்று திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்ட மன்சூர் அலிகானுக்கு அங்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், வேலூர் குடியாத்தம் பகுதியில் தனக்கு கட்டாயப்படுத்தி ஜூஸ் மற்றும் மோர் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னரே உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஜூஸில் விஷம் கலந்து கொடுத்திருப்பார்களோ என்றும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மன்சூர் அலிகான் நேற்று இரவு அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகி சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு இன்னும் உடல்நிலை முழுமையாக சரியாகாததால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க கூறியுள்ளனர்.

ஆனால் மன்சூர் அலிகான் ஓய்வெடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தேர்தல் நடைபெறுவதால் உடனடியாக வேலூருக்கு செல்ல வேண்டுமென கூறி மருத்துவமனையில் இருந்து தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அவருக்கு உடலில் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் முழுமையாக குணமடையாமல் அவர் இப்படி செல்வது சரியில்லை என மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.

முடிவில் உறுதியாக இருக்கும் வேங்கைவயல் கிராம மக்கள்.. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடிகள் !! 

0

முடிவில் உறுதியாக இருக்கும் வேங்கைவயல் கிராம மக்கள்.. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடிகள் !!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் இப்போது வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.

முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனித்க்கழிவுகளை கலந்து விட்டனர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகியும் இப்போது வரை இதுதொடர்பாக ஒரு குற்றவாளியை கூட காவல்துறையினர் கை செய்யவில்லை. இதனால் இதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அக்கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

தேர்தல் அதிகாரிகளும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் ஆனால் கிராம மக்கள் அதில் சமாதனம் அடையவில்லை. அவர்களின் முடிவில் உறுதியாக உள்ளனர். காலை முதல் தற்போது வரை திருச்சி தொகுதிக்குட்பட்ட இந்த வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. 549 வாக்காளர்கள் உள்ள இந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

வேங்கைவயல் மற்றும் இறையூர் ஆகிய இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் தான் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறியிருந்தனர். அதன்படியே தற்போது வரை இந்த இரு கிராமங்களில் இருந்து ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை. இதனால் இன்று மாலைக்குள் இந்த இரு கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

OIL Requirement: மாதம் ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் வேலை!! ஏப்ரல் 26 வரை விண்ணப்பம் செய்யலாம்!

0

OIL Requirement: மாதம் ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் வேலை!! ஏப்ரல் 26 வரை விண்ணப்பம் செய்யலாம்!

இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள “Advisor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 26.04.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Advisor

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 65 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,15,000/-ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Interview(நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் (https://oil-india.com/Current_openNew.aspx) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 26.04.2024

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு இந்த ஒரு இலை!! இதை எண்ணையில் காய்ச்சி தைலம் போல் தடவுங்கள்!!

0

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு இந்த ஒரு இலை!! இதை எண்ணையில் காய்ச்சி தைலம் போல் தடவுங்கள்!!

முதியவர்கள் சந்தித்த வரும் நோயாக இருந்த மூட்டு வலி தற்பொழுது இளம் வயதினரையும் பாதித்து வருகிறது.உடல் பருமன்,ஊட்டச்சத்து குறைபாடு,எலும்பு தேய்மானம்,ஜவ்வு தேய்மானம் போன்ற பல காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலை
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 கப் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 முதல் 15 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.

10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைப்பதன் மூலம் அவை சுண்ட ஆரம்பிக்கும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு துடைத்து விட்டு பின்னர் தயாரித்து வைத்துள்ள புதினா எண்ணெய் சிறிதளவு தடவி மசாஜ் செய்யவும்.தினமும் இந்த புதினா எண்ணெயை மூட்டுகளுக்கு தடவி வந்தால் இளமை பருவ மூட்டு வலி மற்றும் முதுமை காலத்தில் வரக் கூடிய மூட்டு வலி முழுமையாக குணமாகும்.

அதேபோல் தேங்காய் எண்ணெயில் கற்பூரம்,புளி,கல் உப்பு போட்டு காய்ச்சி வடிகட்டி மூட்டுகளில் தேய்த்து வந்தாலும் மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறையும்.

Gas Trouble? இதை குடித்த நொடியில் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் வெளியேறும்!!

0

Gas Trouble? இதை குடித்த நொடியில் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் வெளியேறும்!!

ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் உருவாகிறது.இதனால் தர்ம சங்கடமான சூழல் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.எனவே இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுபட இந்த வைத்திய குறிப்புகள் தங்களுக்கு உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)அரைக்கீரை
2)சீரகம்
3)பூண்டு
4)மஞ்சள் தூள்
5)உப்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு அரைக்கீரை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைக்கீரையை சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் 2 பல் பூண்டு மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்து கீரையில் சேர்க்கவும்.பிறகு 1/4 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்தால் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் ஆசனவாய் மூலம் வெளியேறி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)ஓமம்

செய்முறை:-

கால் தேக்கரண்டி ஓமத்தை வறுத்து பொடி செய்து ஒரு கப் தயிரில் கலந்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

அதேபோல் வாயுத் தொல்லை இருப்பவர்கள் இளநீர் குடிப்பதன் மூலம் நல்ல தீர்வு காணலாம்.ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு ஸ்பூன் அளவு நீரில் கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் அகலும்.

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!

0

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக உள்ள சித்திரை சுப மாதம் ஆகும்.கடந்த ஞாயிறு அன்று தான் இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கியதும்.இந்நிலையில் சித்திரை மாதத்தில் வரக் கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு இந்த பூஜை செய்தால் நிச்சயம் பண விஷயத்தில் கஷ்டம் ஏற்படாது.

இன்று சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.இந்த நாளில் மாலை 6 மணிக்குள்ளாக கீழே சொல்லப்பட்டுள்ளபடி மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்ய வேண்டும்.

முதலில் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறையை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து மல்லி பூவில் மாலை சாற்றவும்.

அதன் பின்னர் மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களை நெய்வேத்தியமாக வைக்கவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் 3 கருப்பு ஏலக்காய்,1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் ஒரு பச்சை கற்பூரத்தை போட்டு மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விடவும்.

இவ்வாறு செய்த பின்னர் பண வரவு அதிகரிக்க வேண்டும்.கடன் பிரச்சனை,பணப் பிரச்சனை நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை மனமுருகி வணங்கவும்.

அதன் பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணி எடுத்து அதனுள் இந்த கருப்பு ஏலக்காய்,பெருஞ்சீரகம் மற்றும் பச்சை கற்பூரத்தை வைத்து முடிச்சி போட்டு பணம் உள்ள இடத்தில் வைக்கவும்.இதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி விட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ தொடங்குவீர்கள்.

காலையில் நிம்மதியாக மலத்தை வெளியேற்ற இதை பழம் ஒன்று சாப்பிடுங்கள்! ரிசல்ட்ட பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

0

காலையில் நிம்மதியாக மலத்தை வெளியேற்ற இதை பழம் ஒன்று சாப்பிடுங்கள்! ரிசல்ட்ட பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

மலச்சிக்கல் பாதிப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர்.உடலில் நீர்ச்சத்து,நார்ச்சத்து குறைந்தால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும்.

இந்த மலச்சிக்கல் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டால் அவை குடல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

குடலில் இறுகி கிடக்கும் மலக் கழிவுகளை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)விளக்கெண்ணெய்
2)உலர் அத்தி பழம்

செய்முறை:-

காலையில் எழுந்ததும் பற்களை துலக்கி விட்டு ஒரு உலர் அத்திப்பழத்தில் 2 அல்லது 3 சொட்டு விளக்கெண்ணெய் ஊற்றி சப்பிடவும்.இவ்வாறு செய்தால் மலக்குடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)பப்பாளி
2)தேன்

செய்முறை:-

ஒரு கீற்று பப்பாளி பழத்தில் சிறிது தேன் சேர்த்து காலை நேரத்தில் சாப்பிட்டால் சில நிமிடங்களில் இறுகிய மலம் அடித்துக் கொண்டு வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)உலர் திராட்சை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிளாஸ் அளவு நீரில் 5 உலர் திராட்சை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சம் பழம்
2)உப்பு

செய்முறை:-

ஒரு கிளாஸ் அளவு நீரை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/4 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து குடித்தால் குடலில் இறுகி கிடக்கும் மலம் இளகி வெளியேறும்.

சிறுநீரகத்தில் உள்ள பெரிய கற்களையும் அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும் பாட்டி மருத்துவம்!!

0

சிறுநீரகத்தில் உள்ள பெரிய கற்களையும் அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும் பாட்டி மருத்துவம்!!

மனித உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம்.உடலில் உருவாகும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை சிறுநீரகம் செய்கிறது.

ஆனால் இந்த சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி விட்டால் அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.தற்பொழுது சிறுநீரக கல் பாதிப்பை பலர் சந்தித்து வருகின்றனர்.சிறுநீரக கல் உருவாக காரணம் நாம் செய்யும் தவறுகள் தான்.

அதாவது உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்தாமை,சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது,தைராய்டு,சிறுநீரக தொற்று போன்றவை சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு காரணம் ஆகும்.

உணவில் அதிகளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சிறுநீரக கல் அறிகுறிகள்:-

1)ஆண்குறி வீக்கம்
2)சிறுநீர் பை வீக்கம்
3)சூடான சிறுநீர் வெளியேற்றம்
4)அதிக உடல் வலி
5)பசியின்மை
6)சிறுநீரில் துர்நாற்றம் வீசுதல்
7)சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் எளிய வழிகள்:

*மூக்கிரட்டை கீரை

ஒரு கைப்பிடி அளவு மூக்கிரட்டை கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

*நெருஞ்சில் + சுக்கு

ஒரு கப் அளவு நீரில் ஒரு தேக்கரண்டி நெருஞ்சில் முள் மற்றும் ஒரு துண்டு இடித்த சுக்கு சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.

வெயில் காலத்தில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் வறட்சியை சரி செய்ய உதவும் கை வைத்தியம்!!

0

வெயில் காலத்தில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் வறட்சியை சரி செய்ய உதவும் கை வைத்தியம்!!

வெயில் காலத்தில் உடலில் அதிகளவு பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்று கண்.அதிக உடல் சூட்டால் கண் எரிச்சல்,கண் வறட்சி,கண் வலி ஏற்படும்.கண்களில் குறைபாடு ஏற்பட்டால் அவை மிகுந்த சிரமத்தை உண்டு பண்ணி விடும்.

காலையில் எந்த உடன் முகம் மற்றும் கண்களை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.முகத்திற்கு சோப் பயன்படுத்தாமல் வாஸ் செய்யுங்கள்.அதன் பின்னர் தங்களால் முடிந்த அளவிற்கு தண்ணீர் அருந்துங்கள்.

இவ்வாறு செய்வதால் உடல் சூடு தணியும்.இதனால் கண் எரிச்சல் நீங்கும்.அதன் பின்னர் பழைய சாதம் இருந்தால் அதை குடித்து உடலை குளிர்ச்சியாக்கி கொள்ளலாம்.இரவு தூங்கச் செல்வதற்கு முன் சில சொட்டு விளக்கெண்ணெயை கண்களை சுற்றி அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்வதினால் கண் எரிச்சல்,வறட்சி நீங்கி கண் பார்வை தெளிவாகும்.

கேரட்,வெள்ளரி போன்றவற்றை வட்டமாக நறுக்கி கண்களை மீது வைத்து சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவும்.இதனால் கண் எரிச்சல்,வறட்சி நீங்கும்.

கண் இமைகளில் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் கண் வறட்சி நீங்கும்.பபிரஸ் கற்றாழை ஜெல்லை ப்ரிட்ஜில் வைத்து ஐஸ்பேக் போல் தயார் செய்து கண்களுக்கு மசாஜ் கொடுக்கலாம்.இவற்றை எல்லாம் கடைபிடித்து வந்தால் கண் எரிச்சல்,கண் வறட்சி நீங்கும்.

முடி வெடிப்பு ஒல்லி பின்னல் பிரச்சனையா? கேரட்டுடன் இந்த மூன்று பொருட்கள் இப்படி பயன்படுத்தினால் வெட்ட வெட்ட முடி வளரும்!!

0

முடி வெடிப்பு ஒல்லி பின்னல் பிரச்சனையா? கேரட்டுடன் இந்த மூன்று பொருட்கள் இப்படி பயன்படுத்தினால் வெட்ட வெட்ட முடி வளரும்!!

ஆண்,பெண் இருவருக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல்.ஹார்மோன் பிரச்சனை,ஊட்டச்சத்து குறைபாடு,மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

சிலருக்கு முடி நீளமாக இருக்கும்.ஆனால் அடர்த்தி இருக்காது.இதை சரி செய்ய வீட்டு வைத்தியங்களை செய்தல் நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)கேரட்
2)தயிர்
3)வெந்தயம்
4)வாழைப்பழம்
5)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றிஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.மறுநாள் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊறவைத்த வெந்தயம்,கேரட் துண்டுகள்,3 தேக்கரண்டி தயிர்,அரை வாழைப்பழத்தின் துண்டுகள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பிறகு அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இந்த விழுதை தலை முழுவதும் அப்ளை செய்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.அதன் பிறகு வழக்கம் போல் நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

இந்த ஹேர் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல்,முடி வெடிப்பு நீங்கி நன்கு அடர்த்தியாக வளரும்.