வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
Home Blog Page 2

வாக்களித்த அடையாளத்தை காட்டினால் பீர் இலவசம்.. குவியும் வாக்காளர்கள்..!!

0

வாக்களித்த அடையாளத்தை காட்டினால் பீர் இலவசம்.. குவியும் வாக்காளர்கள்..!!

தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக தமிழகத்தில் நடந்த தேர்தலில் வெயில் மற்றும் வாக்களிப்பதில் விருப்பம் காட்டாததால் குறைவான வாக்குகளே பதிவானது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை.

100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தது. இருந்தும் 64% வாக்குகள் மட்டுமே பதிவானது. இதனால் கர்நாடகா உள்ளிட்ட தொகுதிகளில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய ஹோட்டல்கள், பார் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏகப்பட்ட ஆஃபர்களை அள்ளி குவித்துள்ளன.

அதன்படி வாக்கு செலுத்திய மை அடையாளத்துடன் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தால் சுடச்சுட பட்டர் தோசை, நெய் சாதம், பழச்சாறு வழங்கப்படும் என ஹோட்டல் ஒன்று அறிவித்துள்ளது. அதேபோல வொண்டர்லா நிறுவனம் 10 முதல் 15% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதைவிட இளைஞர்களை கவரும் வகையில் ஒரு சிறப்பு ஆஃபர் உள்ளது. அதன்படி ஹட் பீசனஹள்ளியில் அமைந்துள்ள Deck of Brews என்ற தனியார் பார் ஒன்றில் இன்று  (26ஆம் தேதி) நடைபெறும் தேர்தலில் வாக்களித்துவிட்டு, 27ஆம் தேதி வரும் முதல் 50 நபர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த செய்தியை அறிந்த பெங்களூரு மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் 100% வாக்குப்பதிவு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!!

0

ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக கோவை தொகுதியில் நிறைய வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாமல் விடுபட்டு இருந்தது. அதிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு விட்டதாக கோவை தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

அதிலும் குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் பெயரை மட்டும் தான் நீக்கி விட்டார்கள் என அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், இன்று கோவையில் பாஜகவினர் மற்றும் பீப்பிள் ஆஃப் அண்ணாமலை என்ற இயக்கத்தை சேர்ந்த பலர் வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக நீதி நியாயம் கேட்டு அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் எழுப்பி பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் நான் உயிருடன் இருக்கிறேன். ஆனால் எனக்கு ஏன் வாக்கு இல்லை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை பேரும் வாக்களித்தவர்கள்.

அவர்கள் அனைவரின் கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான அடையாளமாக மை இடப்பட்டிருந்தது. தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டு எங்களுக்கு வாக்கு இல்லை என கூறி பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் பாஜகவை டிரோல் செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களே பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் சாம்பார் சாப்பிடவே கூடாது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

0

மக்களே பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் சாம்பார் சாப்பிடவே கூடாது!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

நாம் தினசரி உண்ணும் உணவிலேயே எக்கச்சக்க புரதங்கள் உள்ளது. ]அந்த வகையில் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் நாம் சாப்பிட்டு வரும் சாம்பாரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது பெரிதளவில் யாருக்கும் தெரியாது. நாம் காலம் காலமாக டிபன் என்றாலும் சரி சாதம் என்றாலும் சரி முதலில் கேட்பது சாம்பார் தான்.

அதில் உபயோகிக்கும் எந்த ஒரு பருப்பாக இருந்தாலும் அதிகளவு புரதம் இருக்கும். அத்தோடு பொட்டாசியம் நார்ச்சத்து புரோட்டின் சோடியம் இரும்புச்சத்து விட்டமின்கள் என ஏராளமானவையும் இதில் அடங்கும்.பொதுவாக சாம்பார் செய்யும் பொழுது அதில் பச்சை காய்கறிகளை தான் சேர்ப்பார்கள், ஆனால் பட்டாணி போன்றவற்றை சேர்க்க மாட்டார்கள்.அவ்வாறு பட்டாணியை சேர்த்தால் அதில் சுவையை கூட்டுவதுடன் மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

அதிகளவு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாம்பாரில் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதில் சிறிதாவது கெடுதல் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில், சாம்பாரில் கார்போஹைட்ரேட் ஆனது மிகவும் குறைவாக காணப்படும். னவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகளவு சாம்பார் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

டிபன்-வுடன் சாம்பார் சாப்பிட்டாலும், சாதத்தோடு சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளலாம்.அதேபோல சாம்பாரில் சேர்க்கப்படும் அதீத உப்பு மற்றும் புளி காரணமாக நமது பல் மேலிருக்கும் எனாமல் விரைவில் போக அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி சிறுநீரக கல், நாளங்களில் சுருக்கம் போன்றவை சாம்பார் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு விரைவில் வருவதாக கூறுகின்றனர்.

பொதுவாக உப்பை குறைவாகவே உணவில் உபயோகப்படுத்தி உண்ண வேண்டும் இல்லையென்றால் உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பிற்கு தள்ள நேரிடும். அந்த வகையில் சாம்பாரில் குறைந்த அளவே உபயோகிப்பது நல்லது.அதே போல கடைகளில் வைக்கும் சாம்பார் பொடிகளில் எண்ணற்ற கலப்படம் வாய்ந்த பொருட்கள் காணப்படும்.அது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.எனவே அதனை கடைகளில் வாங்கி சேர்ப்பதுடன் வீட்டில் அரைப்பது மிகவும் நல்லது.

போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!

0

போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!

மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் போஸ்ட் ஆபிஸில் காலியாக உள்ள ‘கார் ஓட்டுநர்’ பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

பணி: கார் ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்:

கார் ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

கார் ஓட்டுநர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 14-05-2024

AC யை இப்படி உபயோகித்தால் 100% கரண்ட் பில் வரவே வராது!! இந்த ஒரு ட்ரிக் மட்டும் பலோ பண்ணுங்கள்!!

0

AC யை இப்படி உபயோகித்தால் 100% கரண்ட் பில் வரவே வராது!! இந்த ஒரு ட்ரிக் மட்டும் பலோ பண்ணுங்கள்!!

கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான வீடுகளில் ஏசி உபயோகிப்பானது அதிகரித்து விடும்.அவ்வாறு உபயோகிக்கப்படும் ஏசியை முறையாக ஆன் மற்றும் ஆப் செய்யவில்லை என்றால் கட்டாயம் மின்சார கட்டணம் மிகவும் அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

பலரும் தங்களது வீடுகளில் உண்டாகும் வெப்பம் தாங்க முடியாமல் உடனடியாக ஏசியை ஆன் செய்வர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த அறை குளிர்ச்சி அடைந்ததும் உடனடியாக ஏசியை ஆப் செய்வர்.ஏனென்றால் அப்படியே விட்டு விட்டால் மின்சார கட்டணம் உயர்வாக வந்துவிடும்.ஏசி உபயோகிக்கும் அனைவரும் ஆன் செய்வதை முறையாக செய்து விட்டாலும், ஆப் செய்வதில் தவறிழைத்து விடுகின்றனர்.

இதனால் என்னவோ மின்சார கட்டணமும் உயர்ந்து வருகிறது.சரியான முறையில் ஆப் செய்தால் மின்சார கட்டணத்தை சிக்கனப்படுத்தலாம்.பொதுவாக ஏசி ஆன் செய்வதற்கு முன் அனைவரும் ஸ்டெபிலைசரை ஆன் செய்வர் அதில் பச்சை நிற லைட் எரிந்த உடன் ஏசி ஆன் செய்யப்படும்.அதுவே ஏசி ஆப் செய்யும் பொழுது டைமர் செட் அப் அல்லது ரிமோட் யில் அப்படியே ஆப் செய்து விடுவர்.

இதனால் மின்சார கட்டனமானது உயர்வாகத்தான் வரும்.பொதுவாகவே ஏசியை ஆப் செய்து விட்டாலும் அதன் பின் இருக்கும் ஸ்டெபிலைசர் ஆனது ஒரு வித மின்சாரத்தை எடுத்துக் கொண்டுதான் இருக்கும்.இதனால் எக்கச்சக்கமான மின்சார கட்டணமானது வந்துவிடும்.இதனை குறைக்க முதலில் ஏசி ஆப் செய்ததும் உடனடியாக ஸ்டெபிலைசரையும் ஆப் செய்து விட வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே கோடை காலத்தில் ஏசி உபயோகித்தால் கூட மின்சார கட்டணம் அதிகமாக வராமல் தடுக்க முடியும்.

குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!!

0

குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!!

குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கும் ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா போன்ற பொருட்களில் இரசாயனம் கலந்திருக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.நம் பாட்டி காலத்தில் பருப்பு,தானியங்களை அரைத்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.அது தான் ஹெல்தியும் கூட.

ஆனால் இன்று அனைவரின் லைஃப் ஸ்டைலும் மாறி விட்டது.காலத்திற்கேற்றார் போல் வாழத் தொடங்கி விட்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த தவறுகின்றனர்.இதன் விளைவே ஊட்டச்சத்து குறைபாடு.இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மீண்டும் பழைய பழக்கங்களை கொண்டு வர வேண்டும்.

ஆரோக்கியமான ஊட்டச்சத்து பவுடர் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)சிவப்பு அவல் – 250 கிராம்
2)பனங்கிழங்கு – 5
3)குதிரைவாலி – 250 கிராம்
4)சோயா – 200 கிராம்
5)வர பட்டாணி – 50 கிராம்
6)பூசணி விதை – 50 கிராம்
7)ஜாதிக்காய் – 2
8)அமுக்கரா கிழங்கு – 100 கிராம்
9)சுக்கு – 1 துண்டு
10)ஏலக்காய் – 2
11)முருங்கை பருப்பு – 50 கிராம்
12)வேர்க்கடலை – 250 கிராம்
13)பார்லி அரிசி – 200 கிராம்
14)பச்சை பயறு – 200 கிராம்
15)பாதாம் பருப்பு – 250 கிராம்

செய்முறை:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ளவும்.பனங்கிழங்கு,ஏலக்காய் தவிர்த்து இதர பொருட்களை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பனங்கிழங்கை மட்டும் இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவிட்டு வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெயிலில் உலர்த்திய அனைத்து பொருட்களையும் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுக்கும் பொழுது கருகிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

இந்த பொருட்களை சூடு ஆறும்படி விட்டு பின்னர் மிக்ஸி ஜாரில் போடவும்.பின்னர் வாசனைக்காக இரண்டு ஏலக்காய் சேர்த்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இதை ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆற விட்டு ஈரமில்லாத பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் அரைத்த ஊட்டச்சத்து பவுடர் 2 தேக்கரண்டி அளவு கொட்டி 4 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் பால் ஊற்றவும்.பின்னர் கரைத்த ஊட்டச்சத்து பவுடரை ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சுவைக்காக பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இந்த ஊட்டச்சத்து மிக்க பால் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை 5 நிமிடத்தில் சரி செய்யும் வித்தை இந்த விதையில் உள்ளது!!

0

அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை 5 நிமிடத்தில் சரி செய்யும் வித்தை இந்த விதையில் உள்ளது!!

தவறான உணவு பழக்கங்களால் மார்பு பகுதிக்கு கீழ் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படும்.இதை தான் அசிடிட்டி அதாவது நெஞ்செரிச்சல் என்று சொல்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் எரிச்சல்,அடிக்கடி புளித்த ஏப்பம் வெளியேறுதல் ஆகியவை அசிடிட்டிக்கான அறிகுறிகள் ஆகும்.

உணவு எடுத்துக் கொள்வதில்லை தாமதம் ஏற்பட்டால் அசிடிட்டி உருவாகும்.வயிறு காலியாக இருக்கும் பொழுது குடலில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதிக்க தொடங்குகிறது.இதனால் அல்சர் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.வறுத்த,பொரித்த உணவுகள்,குளிர் பானங்களை சாப்பிட கூடாது.அதேபோல் சிட்ரஸ் பழங்களை குறைவான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

காலையில் கிராம்பு ஊறவைத்த நீரை குடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து ஓரளவு மீள முடியும்.மூன்றுவேளை உணவுகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.குளிர்ச்சி நிறைந்த துளசி இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தலாம்.

வெந்தய விதையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி முழுமையாக குணாகும்.தயிர் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்றாலும் அதை குறைவாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் மோர்,இளநீர் அருந்தலாம்.நீரில் ஊறவைத்த சாதத்தை உப்பு சேர்க்காமல் அருந்தலாம்.கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை மட்டும் எடுத்து சாப்பிடலாம்.இவை அனைத்தும் அசிடிட்டி பிரச்சனையை போக்க கூடிய வழிகள் ஆகும்.

விழுந்து முளைத்த பற்கள் மீண்டும் ஆட்டம் காண்கிறதா? இதை ரொம்ப சுலபமான முறையில் சரி செய்யலாம்!!

0

விழுந்து முளைத்த பற்கள் மீண்டும் ஆட்டம் காண்கிறதா? இதை ரொம்ப சுலபமான முறையில் சரி செய்யலாம்!!

சிறுவயதில் நம் அனைவருக்கும் பற்கள் விழுந்து புதிதாக முளைப்பது இயல்பான ஒன்று தான்.பற்கள் ஒருமுறை மட்டுமே விழுந்து முளைக்க கூடியவை.இதனால் பற்களை அதிக கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும்.

தினமும் இருமுறை பற்களை துலக்க வேண்டும்.உணவு உட்கொண்ட பின்னர் வாயை கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் இதை பலர் செய்வது இல்லை.இதனால் பல் சொத்தை,ஈறுகளில் வலி,வீக்கம் ஏற்படுதல்,பல் ஆடுதல் போன்ற பிரசச்னைகள் ஏற்படும்.

வயதான பின்னர் பற்களை ஆடினால் கூட பரவாயில்லை.ஆனால் இளம் வயதில் பல் ஆட்டம் கண்டால் அதை கவனித்து சரி செய்து கொள்வது அவசியம்.பொதுவாக பற்கள் ஆடும் பொழுது உணவுகளை சாப்பிடுவது என்பது கடினமாக ஒன்றாக இருக்கும்.

பற்கள் ஆட்டம் காண்பதை உணர்ந்து விட்டால் தாமதம் செய்யாமல் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்கள்.நிச்சயம் பல் ஆடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

பற்கள் வலுவிழந்து ஆடுவதற்கான காரணங்கள்:-

1)சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ளுதல்

2)ஈறுகளில் பிரச்சனை

3)பற்களில் காயங்கள் ஏற்படுவது

4)சொத்தை பற்கள்

பல் ஆடல் பிரச்னையை எவ்வாறு சரி செய்வது?

*நல்லெண்ணெயை பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வந்தால் தளர்வான பற்கள் வலிமையாகும்.

*தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் பற்கள் வலிமையாகும்.

*பெரு நெல்லிக்காயை பொடி செய்து பற்களை துலக்கி வந்தால் ஆடும் பற்கள் வலிமையாகும்.

*பூண்டை இடித்து ஆடும் பற்களை மீது பேஸ்ட் போல் தடவினால் வலுவிழந்த பற்கள் வலிமை பெறும்.

*கல் உப்பை நீரில் கரைத்து பற்களை சுத்தம் செய்து வந்தால் பல் இடுக்குகளில் தேங்கி இருக்கும் பாக்டீரியாக்கள்,கிருமிகள் அனைத்தும் அழிந்து போகும்.

*தேங்காய் எண்ணெயில் சிறிது உப்பு சேர்த்து கலக்கி பற்களை தேய்ப்பதன் மூலம் ஆடுகின்ற பற்களை வலிமையாக்கலாம்.

*மஞ்சள் மற்றும் மிளகை இடித்து பேஸ்ட்டில் கலந்து பற்களை துலக்கி வருவதன் மூலம் பல் ஆடல் பிரச்சனையை சரி செய்து கொள்ள முடியும்.

பெண்களே 10 நிமிடங்கள் இப்படி செய்தால் உங்களின் சிறிய மார்பகங்கள் பெரியதாக மாறிவிடும்!!

0

பெண்களே 10 நிமிடங்கள் இப்படி செய்தால் உங்களின் சிறிய மார்பகங்கள் பெரியதாக மாறிவிடும்!!

பெண்கள் அனைவரும் தங்களின் மார்பகங்களை பெரியதாக வைத்துக் கொள்ள ஆசைக் கொள்கிறார்கள்.ஆனால் ஒருசில பெண்களுக்கு மட்டுமே அவர்கள் விரும்பியபடி மார்பகங்கள் இருக்கிறது.

பெண்களின் தங்களின் மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொள்ள பேடட் ப்ரா பயன்படுத்துகின்றனர்.ஒருசிலர் அறுவை சிகிச்சை மூலமாக மார்பகத்தை பெரிதாக்கி கொள்கின்றனர்.ஆனால் இவை எதுவும் இல்லாமல் தங்களின் மார்பகங்களை இயற்கையான முறையில் பெரிதாக்க முடியும் என்பதை பெண்கள் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் ஆயில் மஜாஜ் மூலம் மார்பகங்களை பெரிதாக்கி கொள்ளுங்கள்.வைட்டமின்கள்,புரோட்டின்,கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக அளவை பெரிதாக்க கூடிய ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

ஆயில் மசாஜ் மூலம் மார்பகங்களை பெரிதாக்க வழிகள்:-

தேங்காய் எண்ணெயை வெது வெதுப்பான பக்குவத்தில் சூடாக்கி மார்பகங்களில் ஊற்றி வட்ட வடிவில் மசாஜ் செய்து வந்தால் அவை விரைவில் பெரிதாகும்.

வெந்தயம்,கிராம்பு மற்றும் ஆளி விதை சம அளவு எடுத்து 100 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும்.இவை மிதமான சூட்டில் இருக்கும் பொழுது மார்பகங்களின் மீது தடவி வந்தால் அவை அளவில் பெரியதாகவும்,அதிக மிருதுவாகவும் இருக்கும்.

அதேபோல் தினமும் ஆலிவ் எண்ணெய் அல்லது டீ ட்ரி ஆயிலை மார்பங்களின் மீது ஊற்றி குறைந்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வருவதன் மூலம் மார்பக அளவை அதிகரிக்க முடியும்.

மார்பங்களை பெரிதாக்க வேண்டும் என்ற ஆசையில் சந்தைகளில் விற்க கூடிய கெமிக்கல் க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துவதை தவிர்த்து மேலே சொல்லப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

விஜய்யுடன் உல்லாசமாக வாழ்ந்து தற்கொலைக்கு முயன்ற அஜித் பட நடிகை

0

விஜய்யுடன் உல்லாசமாக வாழ்ந்து தற்கொலைக்கு முயன்ற அஜித் பட நடிகை

விஜய்யுடன் உல்லாசமாக வாழ்ந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ‘S’ எழுத்து நடிகை.இவர் அஜித் உடன் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்,நடிகைகளை பொறுத்தவரை காதல்,திருமணம் என்பது சாதாரண விஷயமாக இருந்து வருகிறது.இரண்டு,மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் நடிகர்,நடிகைகள் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்.

அதேபோல் பல பேருடன் காதல் உறவில் இருந்து விட்டு பின்னர் லிஸ்டில் இல்லாத ஒருவரை திருமணம் செய்து குழந்தை குட்டி என்று சந்தோஷமாக வாழும் நடிகர்,நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

படத்தில் யோக்கியர்கள் போல் காட்டிக் கொள்ளும் நடிகர்களில் பலர் நிஜ வாழ்க்கையில் வில்லன்களை விட மோசமானவர்களாக இருப்பார்கள்.அதில் ஒருவர் தான் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய்.

விஜய் அவர்கள் தனது தீவிர ரசிகையான சங்கீதா என்ற லண்டன் வாழ் இலங்கை தமிழ் பெண்ணை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும்,திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளார் என்பது ஊரறிந்த உண்மை.ஆனால் திருமணத்திற்கு முன் விஜய் அவர்கள் தன்னுடன் இணைந்து நடித்த நடிகையை தீவிரமாக காதலித்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த சங்கவி குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.இவர் விஜய்யுடன் விஷ்ணு,ரசிகன்,கோயம்புத்தூர் மாப்பிளை,நிலவே வா என்று 4 படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.இதில் ரசிகன்,கோயம்புத்தூர் மாப்பிளை ஆகிய படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்திருக்கும்.

படத்தில் முத்தக்காட்சி,கட்டி அணைத்தல்,குளியல் என்று அனைத்து வித ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்த இவர்களுக்குள் அதிகளவு நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது.இதனால் விஜய், ஊட்டி மற்றும் சென்னையில் பங்களா வாங்கி சங்கவியுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.விஜய்-சங்கவிக்கு திருமணத்தை தவிர மற்ற அனைத்தும் நடந்து விட்டது என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.

ஒருகட்டத்தில் சங்கவியே கதி என்று கிடந்த விஜய்யை ரீல் லைஃப் வேறு,ரியல் லைஃப் வேறு.நம் குடும்பத்திற்கு ஒரு நடிகை மருமகளாக வருவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று எஸ்ஏசி சொல்லிய பின்னர் தான் இவர்களின் காதல் முடிவிற்கு வந்திருக்கிறது.

மேலும் விஜய் உடனான காதலை அவரது தந்தை எஸ்ஏசி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சங்கவி விஷம் அருந்தி மருத்துமனையில் அனுமதித்து காப்பாற்றப்பட்டார் என்ற செய்தி பரவி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.