வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
Home Blog Page 15

உயர் இரத்த அழுத்தம்(BP): இதை ஜூஸ் குடித்து கூட உடனடியாக கட்டுப்படுபடுத்தலாம்!!

0

உயர் இரத்த அழுத்தம்(BP): இதை ஜூஸ் குடித்து கூட உடனடியாக கட்டுப்படுபடுத்தலாம்!!

தற்பொழுது பலர் உயர் இரத்த அழுத்தத்தால் அவதியடைந்து வருகின்றனர்.உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் உப்பை குறைத்து கொள்ள வேண்டும்.

கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.உங்களில் பலர் பிபியை கட்டுப்படுத்த மருந்து மாத்திரை உட்கொண்டு வருவீர்கள்.ஆனால் இவை எதுவும் இல்லாமல் சுவையான பழச்சாறு குடித்து கூட உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

1)வாழைப்பழம்

ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் சிறிது ஐஸ்கட்டி மற்றும் சுவைக்காக சர்க்கரை சேர்த்து மைய்ய அரைத்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

2)மாம்பழம்

அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் மாம்பழமும் ஒன்று.இதன் சதை பற்றை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

மாம்பழத்தில் பொட்டாசியம்,பீட்டா கரோட்டின் அதிகளவு நிறைந்து இருக்கிறது.

3)மாதுளம் பழம்

ஒரு கப் மாதுளை விதையை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து குடித்து வந்தால் பிபி கட்டுப்படும்.

மலக் குடலை சுத்தம் செய்யும் இயற்கை “பேதி உருண்டை”!! இதை எவ்வாறு தயார் செய்வது?

0

மலக் குடலை சுத்தம் செய்யும் இயற்கை “பேதி உருண்டை”!! இதை எவ்வாறு தயார் செய்வது?

வயிற்றில் தேங்கி கிடக்கும் கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றுவது வழக்கம்.ஆனால் ஒரு சிலருக்கு அவை குடலில் தேங்கி இறுகி வெளியில் வராமல் இருக்கும்.இந்த மலக் கழிவுகளை வெளியேற்ற கடையில் விற்க கூடிய பேதி மாத்திரைகளை உட்கொள்ளாமல் இயற்கையான பேதி மாத்திரை தாயார் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையில் பலன் அடைய முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)மலை நெல்லிக்காய் – 2
2)கறிவேப்பிலை – 3 கொத்து
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் இரண்டு மலை நெல்லிக்காயை எடுத்து விதை நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் மூன்று கொத்து கறிவேப்பிலையை நீரில் போட்டு அலசி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி தேனை மிக்ஸி ஜாரில் ஊற்றவும்.பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் முழுவதும் சாப்பிடவும்.

இவ்வாறு செய்வதினால் அடுத்த நாள் காலையில் மலக் குடலில் தேங்கிய மலங்கள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறி விடும்.இதனால் குடல் முழுமையாக சுத்தமாகும்.

நெல்லிக்காய்+கறிவேப்பிலை+தேனை அரைத்து உருண்டைகளாகவும் உட்கொள்ளலாம்.இல்லையேல் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஜூஸ் போலவும் குடிக்கலாம்.

முருங்கை பருப்பு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆயுசுக்கும் மருத்துவரை அணுக தேவையில்லை!!

0

முருங்கை பருப்பு பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆயுசுக்கும் மருத்துவரை அணுக தேவையில்லை!!

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய கீரை,முருங்கை காய்,முருங்கை பிசின்,முருங்கை விதை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.இவை ஆண்,பெண் அனைவருக்கும் கடவுள் கொடுத்த ஒரு வரப் பிரசாதம் ஆகும்.

முருங்கை என்றால் முதலில் நினைவிற்கு வருவது ஆண்மை குறைபாட்டை போக்கும் அருமருந்து என்பது தான்.முருங்கை காயில் உள்ள விதையை காய வைத்து அதனுள் இருக்கக் கூடிய விதையை தனியாக பிரித்து எடுக்கவும்.இதை வெயிலில் நன்கு உலர்த்தி அதனுள் இருக்கக் கூடிய பருப்பை மட்டும் தனியாக எடுத்து லேசாக வறுக்கவும்.250 கிராம் அளவு பருப்பு எடுத்துக் கொண்டால் போதுமானது.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.இந்த முருங்கை விதை பருப்பு பொடியை சூடான நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

1)ஆண்களுக்கு விந்து முந்துதல்,விந்தணு குறைபாடு பிரச்சனை சரியாகும்.
2)பெண்களுக்கு கருப்பை தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.
3)முருங்கை பருப்பு நார்ச்சத்து நிறைந்த பொருள்.இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
4)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
5)உடலுக்கு தேவையான இரும்பு சத்தை வழங்குகிறது.
6)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
7)புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
8)இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
9)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
10)சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உடல் ரொம்ப ஹீட்டா இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து உடலை கூல் ஆக்குங்கள்!!

0

உடல் ரொம்ப ஹீட்டா இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து உடலை கூல் ஆக்குங்கள்!!

உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சூடு தணிந்து புத்துணர்வு கிடைக்க இந்த ட்ரிங்க்ஸ் அருந்துவது நல்லது.

*புதினா ட்ரிங்க்

ஒரு கப் நீரில் 5 புதினா இலை,1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் வட்டமாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகள் இரண்டு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குடித்தால் உடல் சூடு தணியும்.

*வெள்ளரி பழ சாறு

ஒரு வெள்ளரி பழத்தின் சதைப்பற்றை நீர் விட்டு அரைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

*துளசி ட்ரிங்க்

ஒரு கப் நீரில் 10 துளசி இலைகளை போட்டு ஊறவைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள சூடு குறைந்து புத்துணர்வு கிடைக்கும்.

*இஞ்சி பானம்

ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் ஒரு துண்டு இடித்த இஞ்சி,ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் சூடு குறையும்.

*நெல்லிக்காய் ட்ரிங்க்

ஒரு பெரிய நெல்லிக்காயை விதை நீரை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு தணியும்.

*திருநீற்றுப்பச்சிலை விதை

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி திருநீற்றுப்பச்சிலை விதை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு கிளாஸ் லெமன் ஜூஸில் ஊறவைத்த விதையை கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியடையும்.

தேள் கடித்து விட்டால் பதட்ட படாமல் இதை மட்டும் செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் விஷம் முறிந்து விடும்!!

0

தேள் கடித்து விட்டால் பதட்ட படாமல் இதை மட்டும் செய்யுங்கள்!! 5 நிமிடத்தில் விஷம் முறிந்து விடும்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அஞ்சும் விஷ பூச்சிகளில் ஒன்று தேள்.இந்த தேள்கள் ஈரப்பதம் மிகுந்த இடத்தில் இருக்கும்.இந்த விஷ பூச்சி உங்களை கடித்து விட்டால் பதட்ட படாமல் அதன் விஷத்தை முறிக்கும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேள் கடி அறிகுறிகள்:-

*அதிகப்படியான பதட்டம்
*அதிகப்படியான வியர்வை
*வாந்தி
*உயர் இரத்த அழுத்தம்
*மயக்க உணர்வு

1)தேள் கடித்த நபர் ஒரு துண்டு புளியை நீரில் போட்டு கரைத்து குடித்தால் உடலில் பரவிய தேள் விஷம் முறிந்து விடும்.

2)ஒரு பல் வெள்ளை பூண்டை நசுக்கி தேள் கடித்த இடத்தில் பூசிவிட்டால் அதன் விஷம் முறிந்து விடும்.

3)ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டால் தேள் கடி குணமாகும்.

4)குப்பைமேனி இலையை மிளகுடன் அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசுவதன் மூலம் அதன் விஷத்தை முறிக்க முடியும்.

5)ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது மிளகு தூள் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது தேள் கடி மீது பூசுங்கள்.இவ்வாறு செய்தால் தேள் கடி குணமாகும்.

6)ஒரு வெற்றிலையை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து இரு தினங்களுக்கு சாப்பிட்டு வந்தால் தேள் விஷம் முறியும்.

7)தேள் கடித்த இடத்தில் சுண்ணாம்பு சிறிதளவு பூசினால் அதன் விஷம் முறிந்து விடும்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!! இதை விட பெஸ்ட் தீர்வு இருக்க முடியாது!!

0

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!! இதை விட பெஸ்ட் தீர்வு இருக்க முடியாது!!

சுவாசிக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்படுதல்,அதிகப்படியான இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை ஆஸ்துமாவின் அறிகுறிகள் ஆகும்.

இந்த ஆஸ்துமா உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடியது.எனவே ஆஸ்துமா பாதிப்பில் இருந்து மீள இந்த பாட்டி வைத்தியத்தை செய்து வரவும்.

தீர்வு 01:

1)வெந்தயம்
2)தேன்

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு 1 கிளாஸ் தண்ணீர் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஊற வைத்த வெந்தய நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் ஆஸ்துமா முழுமையாக குணமாகும்.

தீர்வு 02:

1)பூண்டு
2)தேன்

ஒரு பல் பூண்டை இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வருவதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

தீர்வு 03:-

1)பட்டைத்தூள்

ஒரு கப் நீரில் 1/4 தேக்கரண்டி பட்டைத்தூள் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா நீங்கும்.

தீர்வு 04:-

1)மிளகு
2)மஞ்சள் தூள்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

தீர்வு 05:-

1)வேப்பிலை
2)மஞ்சள்

ஒரு கப் நீரில் ஒரு கொத்து வேப்பிலை மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து காய்ச்சி வடித்து குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

அந்த விஷயத்தில் என்னோட முடிவு இதுதான்.. முதல் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்.!

0

அந்த விஷயத்தில் என்னோட முடிவு இதுதான்.. முதல் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்.!

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்த விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஷால் இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ரத்னம் படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனால் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக எந்த பக்கம் பார்த்தாலும் ரத்னம் படக்குழுவினர் தான் உள்ளனர். அந்த அளவிற்கு வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷாலிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “எப்போ கல்யாணம் பண்ணப்போறனு என் பெற்றோர்கள் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். முதலில் ஆர்யா திருமணம் முடிந்ததும் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். இப்போது ஆர்யா திருமணம் செய்து குழந்தையே பிறந்து விட்டது. பின் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினேன்.

திருமணம் என்பது சாதாரண விஷயமல்ல. நான் திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதால் அதன் மீது எனக்கு வெறுப்பு என்று அர்த்தமல்ல. நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியின் தீவிர முயற்சியால் இந்த ஆண்டிற்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் என் திருமணம் நடக்கும். மணப்பெண் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கானவள் நிச்சயம் காத்திருப்பாள்” என்று கூறியுள்ளார்.

குழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.!

0

குழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.!

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மோகன் ஜி. இருப்பினும் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் இயக்கி திரெளபதி படம் தான் மோகனை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. அதுமட்டுமின்றி படமும் பெரியளவில் பேசப்பட்டது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ருத்ரதாண்டவம், பாகாசூரன் ஆகிய படங்களை இயக்கினார். இதுதவிர சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி சில சமூக கருத்துள்ள வீடியோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். அந்த வகையில் தற்போது இவர் ஷேர் செய்துள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஸ்மோக் பிஸ்கட் ஒன்றை ஆசையாக வாங்கி சாப்பிடும் சிறுவன் அடுத்த நொடியே வலியால் துடிக்கிறான். இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள மோகன் ஜி அதற்கு கேப்ஷனாக, “இதுபோன்ற ஸ்மோக் பிஸ்கட் திண்பண்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். அதில் இருந்து வரும் புகையை பார்த்து குழந்தைகள் ஆசையாக அதை வாங்குகிறார்கள்.

ஆனால் அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ர்ஜன். அதை ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து. உடனடியாக தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும். பொருட்காட்சி மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இதுபோன்ற உணவுகள் வழங்கப்படுகிறது. எனவே தடை செய்ய வேண்டும்” என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய தலைவர்களால் காலியாகும் மநீம.. அதிர்ச்சியில் கமல்ஹாசன்.!

0

அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய தலைவர்களால் காலியாகும் மநீம.. அதிர்ச்சியில் கமல்ஹாசன்.!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் சாதித்த நிலையில் அரசியல் சாதிக்கப்போவதாக கூறி மாற்று அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கமல்ஹசனால் மாற்றம் வரும் என்று நம்பிய பலரும் அவரது கட்சியில் இணைந்து ஆதரவளித்து வந்தனர்.

ஆனால், நாளடைவில் கமல்ஹாசனும் சராசரி அரசியல்வாதியை போலவே மாறியதால் அவரின் கொள்கைகள் பிடிக்காமல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பலரும் வெளியேறினார்கள். குறிப்பாக இந்த கட்சியில் ஜனநாயகம் இல்லை உள் அரசியல் நடக்கிறது என்று கூறி பத்மப்பிரியா, மகேந்திரன் அனுஷா ரவி ஆகியோர் வெளியேறினார்கள்.

அவர்களை தொடர்ந்து தேர்தல் முடிந்த மறுநாளே மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி தலைவராக இருந்த சங்கர் ரவி இந்த கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அதற்கு அவர் இந்த கட்சியில் ஜனநாயகம் இல்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. எதிர்காலத்திலாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று காரணம் ஒன்றையும் கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மேலும் சில முக்கிய தலைவர்கள் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக பிரபல நடிகரின் மனைவியும், கட்சி தலைமைக்கு இணையாக இருக்கும் நடிகை ஆகிய இருவரும் இந்த கட்சியில் இருந்து வெளியேறி வேறு ஒரு தேசிய கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்ல இவர்களுக்காக மாநில தலைமை டெல்லி தலைமையிடம் பேசி கிட்டத்தட்ட அனைத்தையுமே தயார் செய்து விட்டதாகவும் கூறுகிறார்கள். இப்படி தொடர்ந்து கட்சியில் இருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் வெளியேறி வருவதால், கமல்ஹாசன் செய்வதறியாமல் முழித்து வருகிறாராம்.

முதல்ல ஒழுங்கா நடிங்க.. மண்ட பத்தரம்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன் – விஜய் ஆண்டனி.!

0

முதல்ல ஒழுங்கா நடிங்க.. மண்ட பத்தரம்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன் – விஜய் ஆண்டனி.!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இறுதியாக விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி ஜானர் படமான ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரம்ஜான் தினத்தில் வெளியானது. முன்னதாக இந்த படத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படம் வெளியாகி ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வழக்கம்போல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தையும் கழுவி ஊற்றி விமர்சனம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து அவரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி, “ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலர் பேச்சை கேட்டு ரோமியோ போன்ற நல்ல படத்தை கொண்டாடாமல் விட்டு விடாதீர்கள். ரோமியோ படத்தை பாருங்கள் அன்பே சிவம் படத்தை போல ஆக்கிவிடாதீர்கள்” என கூறியிருந்தார்.

உடனே இதற்கு ப்ளூ சட்டை மாறன், “இறுதியாக ரத்தம், கொலை என பல ப்ளாப்களை கொடுத்த இவர் இந்த படத்தை எப்படியாவது ஓட்டவேண்டுமென முதலிரவில் மனைவி சரக்கடிப்பது போன்ற வித்தியாசமான போஸ்டரை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடினார். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதால், இப்போது விமர்சகர்களை சீண்டி வருகிறார்.

முதலில் ஒழுங்கா நடிக்க கத்துக்கோங்க. இயக்குனர் எடிட்டர் வேலையில தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. தப்பு தப்பா பரமோசன் ஐடியா தர்ற அல்லகைகளை விரட்டி விடுங்க. உங்கள மாதிரி அப்பாவிகளை அழகா மொட்டை அடிச்சிருவாங்க. மண்ட பத்ரம்” என பங்கமாக கலாய்த்து பதிலடி கொடுத்துள்ளார். இவர்களின் இந்த சண்டை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.