செவ்வாய்க்கிழமை, மார்ச் 19, 2024
Home Blog

வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

0

வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் என்னும் பகுதியினை சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவரது பெற்றோர் ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62). அன்ஷூ கேசர்வானிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அன்ஷிகா(21) என்னும் பெண்ணுடன் திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே மணப்பெண்ணான அன்ஷிகாவை அன்ஷு கேசர்வானியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அன்ஷிகா நேற்று இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அன்ஷிகாவின் மரண செய்தி செய்தி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அன்ஷு கேசர்வானி வீட்டிற்கு சென்று தங்கள் மகளின் நிலை அறிந்து அழுது புலம்பியுள்ளனர். பின்னர், அன்ஷு கேசர்வானி குடும்பத்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினர்கள் மத்தியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக உயிரிழந்த அன்ஷிகாவின் உறவினர்கள் அன்ஷு வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்து தீயில் சிக்கிய 5 பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் அன்ஷிகாவின் மாமனார் மாமியாரான ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62) உள்ளிட்ட இருவரும் முற்றிலுமாக தீயில் கருகியதால் உயிரிழந்தனர். அவர்களது உடல் தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!

0

1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!

1986ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. எதிர்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அப்பொழுது இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமலின் நடிப்பில் உருவான மீண்டும் சூர்யோதயம் என்ற திரைப்படத்தின் பெயரைத் தான் எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து கமல் மற்றும் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் மாற்றியுள்ளனர்.

ஆம் அதாவது 1986ம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்து தேர்தலை சந்தித்தது எம்ஜிஆர் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி. அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி மொத்தம் உள்ள 97 நகராட்சிகளில் 11 நகராட்சிகளில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

எதிர்கட்சியாக இருந்த திமுக கட்சி 64 நகராட்சிகளை பெற்று அமோக வெற்றி பெற்றது. அந்நேரத்தில் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் நடிகர் கமல்ஹாசன் அவர்களை வைத்து “மீண்டும் சூர்யோதயம்” என்ற பெயரில் இயக்கிய படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால் திமுக கட்சியின் சின்னம் சூரியன். அந்த தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதனால் இந்த நேரத்தில் மீண்டும் சூர்யோதயம் என்ற பெயரில் படத்தை வெளியிட்டால் திமுக கட்சியின் வெற்றியை கொண்டாடும் விதமாக படம் வெளியாகி இருக்கின்றது என்று எம்ஜிஆர் அவர்கள் நினைத்துக் கொள்வார். அவ்வாறு நினைத்துக் கொண்டால் அவருடைய கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்றுபயந்த படக்குழு உடனே படத்தின் பெயரை ‘நானும் ஒரு தொழிலாளி’ என்று மாற்றினர்.

ஆம் எம்ஜிஆர் அவர்கள் ரஜினிகாந்த் சொல்வது போல நல்லவருக்கும் நண்பருக்கும் மிக்க நல்லவர். அதே போலத்தான் எதிர்க்கும் ஆட்களுக்கும். அதனால் எம்ஜிஆர் அவர்களின் கோபத்திற்கு ஆளானால் ஆள் அடையாளம் இல்லாமல் துடைத்து அழித்து விடுவார் என்று பயந்த இயக்குநர் சி.வி ஸ்ரீதர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் படத்தின். பெயரை மாற்றியுள்ளனர்.

கமல்ஹாசன் அவர்களின் படத்திற்கு நானும் ஒரு தொழிலாளி என்று பெயர் வைத்ததற்கும் ஒரு பிளாஷ்பேக் உள்ளது. 1965ம் ஆண்டு இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் எம்ஜிஆர் அவர்களை வைத்து நானும் ஒரு தொழிலாளி என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நடிகை லதா கதாநாயகியாக நடித்தார். ஆனால் சில நாட்கள் வரை நடந்த படப்பிடிப்பு சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இதையடுத்து கமல்ஹாசன் அவர்களின் மீண்டும் சூர்யோதயம் என்ற திரைப்படத்தின் பெயரை நானும் ஒரு தொழிலாளி என்று மாற்றி எம்ஜிஆர் அவர்களை கோபம் அடையச் செய்யாமல் இயக்குநர் சி.வி ஸ்ரீதர் அவர்கள் தப்பித்துக் கொண்டார். மேலும் கமல்ஹாசன் அவர்கள் நடித்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட நானும் ஒரு தொழிலாளி மே 1ம் தேதி வெளியானது. மேலும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அந்த பெயர் பொருத்தமாக அமைந்தது.

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

0

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரோட் ஷோவில் பங்கேற்றார். இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் திரண்ட கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரோட் ஷோ திட்டம் மூலமாக மக்களை சந்தித்து வருகிறார். இதையடுத்து நேற்று(மார்ச்18) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழக மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ரோட் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2.5 கிலோ மீட்டர் தூரம் திறந்தவெளி வாகனத்தில் பயணித்து மக்களை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயணித்த சாலையின் இரு புறங்களிலும் திரண்ட மக்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து இன்று(மார்ச்19) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலமாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கார் மூலம் பயணித்து சென்றார்.

அதன் பின்னர் திறந்தவெளி வாகனத்தில் ஏறிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்ட மக்களை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கேரளா மக்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா?

0

ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தன்னுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கூடுதல் பொறுப்பு ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றது. தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் தேர்தலை சந்திக்க அனைத்து பணிகளையும் செய்து வருகின்றது.

மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதையடுத்து வரும் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவி வந்தது. இதையடுத்து புதுச்சேரி துணை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நேற்று(மார்ச்18) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இன்று(மார்ச்19) ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணை ஆளுநர் பதவியும் தெலங்கானா மாநில ஆளுநர் பதவியும் வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தேர்தலை சந்திக்கவுள்ளதாகவும் அவர் திருநெல்வேலி அல்லது தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடப் போவதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் உடலில் சர்க்கரை நோய் இருக்கா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது தெரிஞ்சுக்கோங்க!

0

உங்கள் உடலில் சர்க்கரை நோய் இருக்கா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது தெரிஞ்சுக்கோங்க!

பரம்பரை நோயாக இருக்கும் சர்க்கரை நோய் உடலில் இருக்கின்றதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பரம்பரை நோய் என்று சர்க்கரை நோய் ஏன் அழைக்கப்படுகின்றது என்றால் இந்த சர்க்கரைப் நோயானது மற்ற நோய்களைப் போல அல்லாமல் நம்முடைய தாத்தா அல்லது பாட்டிக்கு சர்க்கரை நோய் இருந்திருக்கும். அவர்களை தொடர்ந்து நம்முடைய பெற்றோருக்கு சர்க்கரை நோய் வந்திருக்கும். மேலும் நம்முடைய பெற்றோரை தொடர்ந்து நமக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கின்றது. நம்மை தொடர்ந்து நம்முடைய மகன் பேரன் என்று அடுத்தடுத்து சர்க்கரை நோய் பாதிப்பு என்பது குடும்பத்தில் ஒருவருக்கு இருக்கும். அதன் காரணமாகவே சர்க்கரை நோயை பாரம்பரிய பரம்பரை நோய் என்று அழைக்கிறோம்.

சர்க்கரை நோயை நீரிழிவு நோய் என்றும் அழைக்கப்படுகின்றது. நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால் நாம் நம்முடைய உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக செல்லாமலும் மிகவும் குறைவாக செல்லாமலும் பார்த்துக் கொள்ளை வேண்டும். தினசரி சர்க்கரை நோய்க்கு உண்டான மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.

சர்க்கரை நெயில் இரண்டு விதமாக அதாவது டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு விதமாக இருக்கின்றது. இந்த சர்க்கரை நோய் நமக்கு உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து கண்டுபிடிக்கும் முறை…

பொதுவாக சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் சர்க்கரை பரிசோதனை நாம் செய்வோம். அப்பொழுது சர்க்கரையின் அளவு உடலில் சாதாரணமாகத் தான் இருக்கும். அதுவே சாப்பிட்டு 2 மணி நேரம் கழிந்து சுகர் டெஸ்ட் அல்லது இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரையின் தாக்கம் பற்றி தெரிய வரும்.

உடலில் சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பது குறித்து தெரிந்து கொள்ள முதலில் 12 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் வயிற்றை காலியாக வைக்க வேண்டும். 12 மணி நேரம் கழிந்த பின்னர் குளுக்கோஸ் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதை குடித்த பின்னர் சர்க்கரையின் அளவு 140க்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அதுவே 200க்கும் மேல் அதிகமாக சர்க்கரை அளவு இருந்தால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்பது தான் அர்த்தம். உடனே கண்டிப்பாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

0

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மார்ச் 20 ஆம் தேதி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

பதவி:

*Field Investigator

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03

பணியிடம்: மதுரை

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Post graduate in Economics or Mathematical Economics or Econometrics discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

மார்ச் 26 அன்று நடைபெறவிருக்கும் நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 20.03.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Kerala Recipe: கேரளா ஸ்டைல் இறால் தீயல் – சுவையாக செய்வது எப்படி?

0

Kerala Recipe: கேரளா ஸ்டைல் இறால் தீயல் – சுவையாக செய்வது எப்படி?

அதிக சத்துக்கள் கொண்ட இறால் மீனில் சுவையான தீயல் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)இறால் மீன் – 1 கப்
2)சின்ன வெங்காயம் – 1/4 கப்(நறுக்கியது)
3)தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
4)வரமிளகாய் – 5
5)பூண்டு – 10
6)தேங்காய் துருவல் – 1 கப்
7)புளிக்கரைசல் – 1/4 கப் ( கெட்டியாக)
8)வெந்தயத் தூள் – 1/4 ஸ்பூன்
9)பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
10)கறிவேப்பிலை – 1 கொத்து
11) மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
12)கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
13)உப்பு – தேவையான அளவு
14)மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
15)சோம்பு – 1/2 ஸ்பூன்
16)மிளகு – 1/2 ஸ்பூன்
17)கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:-

முதலில் வாங்கி வந்த இறால் மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம்,சோம்பு,மிளகு,தேங்காய் துருவல், வர மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து கிளறி ஆறவிடவும்.

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து ஆறவைத்த பொருட்களை போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

பிறகு வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.அதன் பின்னர் பெருங்காயம், பூண்டு சிறிது தோல் நீக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு சுத்தம் செய்த இறால் மீன்,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.இதனை தொடரந்து புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

5 நிமிடங்களுக்கு பின்னர் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி குழம்பு சுண்டி வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பின்னர் வாசனைக்காக சிறிது கொத்தமல்லி தழை தூவினால் சுவையான இறால் தீயல் தயார்.

வாழ்நாளில் சர்க்கரை நோயை சந்திக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! 100% பலன் தரும் பவர்புல் வைத்தியம் இது!!

0

வாழ்நாளில் சர்க்கரை நோயை சந்திக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! 100% பலன் தரும் பவர்புல் வைத்தியம் இது!!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பட மற்றும் சர்க்கரை நோய் வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)இலவங்கப்பட்டை
3)மஞ்சள் தூள்
4)தரு கல்தி

செய்முறை:-

முதலில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை மற்றும் ஒரு துண்டு தரு கல்தியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக மஞ்சள் தூள் சேர்க்கவும்.பிறகு அரைத்த பொடி 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

அதன் பிறகு சுத்தமான தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து குழைத்து காலை மலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் இந்த ஜென்மத்தில் வராது.

வாசனை நிறைந்த இலவங்கப்பட்டையில் சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கான ஆற்றல் உள்ளது.அதேபோல் அதிக மருத்துவ குணம் நிறைந்த தரு கல்தி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இந்த தரு கல்தியை பொடியாக்கி சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.

மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சர்க்கரை நோய் வராமல் இருக்க பேருதவியாக இருக்கிறது.

நம்புங்க இதை குடித்தால் ஒரு மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்!!

0

நம்புங்க இதை குடித்தால் ஒரு மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்!!

மனித உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த சிறுநீரகத்தில் தொற்று,கல் அடைப்பு இருந்தால் விரைவில் சிறுநீரகம் செயலிழந்து விடும்.

சிறுநீரகம் செயல் இழந்தால் உடலில் மற்ற உறுப்புக்களும் செயல் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகி விடும்.இந்த சிறுநீரக கற்களை சிகிச்சை இன்றி வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)முள்ளங்கி
2)எலுமிச்சை சாறு
3)தேன்

செய்முறை:-

முதலில் ஒரு முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி துண்டுகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடித்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

0

தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் உடல் பருமன் கூடிக் கொண்டே செல்கிறது.சிலருக்கு அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது.சிலருக்கு எதையும் சாப்பிடாமலே உடல் எடை கூடுகிறது.

உடல் எடை கூடினால் உடலில் பல நோய்கள் எட்டி பார்க்கத் தொடங்கிவிடும்.கட்டுக்கடங்காமல் கூடிப்போன இந்த உடல் எடையை கட்டுக்குள் வைக்க பூண்டு,இஞ்சி மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தி வரவும்.

1)பூண்டு பல் – ஒன்று
2)இஞ்சி – சிறு துண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் இடித்து வைத்துள்ள இஞ்சி,பூண்டு போட்டு கொதிக்க விடவும்.1 1/4 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸாக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுப் பகுதியில் தேங்கி கிடக்கும் கொழுப்பு முழுவதும் கரைந்து விடும்.இஞ்சி மற்றும் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.