
தமிழகத்திற்காக பாஜக வின் அடுத்த அதிரடி திட்டம்
தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சியை மேம்படுத்த 15-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் `கால் சென்டர்கள்’ எனப்படும் அழைப்பு மையங்களை பாஜக உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேச தேர்தலில் அக்கட்சி கையாண்டு வெற்றி பெற்ற இந்த ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தொகுதிவாரியாக தங்கள் கட்சிக்குள்ள செல்வாக்கு, வெற்றிவாய்ப்பு உள்ளிட்ட களநிலவரங்களை நேரில் ஆராய்ந்து கட்சியின் தேசிய தலைமைக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்ததாக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களை வாக்குச்சாவடி வாரியாக நியமித்து, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களையும் தேசிய தலைவர்கள் விரைவில் சந்திக்க உள்ளனர். இவ்வாறு நியமிக்கப்படும் நிர்வாகிகளிடமிருந்து களநிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளவும், தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் தமிழகத்தில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக அழைப்பு மையங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கெனவே, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய மையங்கள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதலில் திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளுக்கு ஒரு மையம் உள்ளிட்ட 7 மையங்களை உடனடியாக உருவாக்கும் முயற்சியில் பாஜக கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பாஜகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, இலவச எரிவாயு சிலிண்டர் பெற்றது உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் புள்ளிவிவரங்களையும்,அவர்களின் கருத்துகளையும் இம்மையங்கள் மூலம் சேகரித்து அவர்களுடனும் பாஜக தலைவர்கள் பேசுவதற்கு இந்த அழைப்பு மையங்கள் உதவும். மேலும், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான வழிகாட்டுதல் மையமாகவும் இவை திகழும் என்றும் கூறியுள்ளார்கள்.
அடுத்த கட்டமாக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியுள்ள இணையதள செயலிகளை செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொடுப்பது, பிரதமரின் உரைகள், அறிக்கைகள், மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் இம்மைய பொறுப்பாளர்கள் ஈடுபடுவார்கள். இவை அனைத்தையும் செயல்படுத்த இம்மையங்களில் அனைத்து நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளும் உருவாக்கப்படவுள்ளது” என்றனர்.
மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்| காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.